×

2 வாரமாக குடிநீர் விநியோகிக்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

தூத்துக்குடி, பிப்.20: தூத்துக்குடி சுந்தரவேல்புரம், அம்பேத்கர்நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மாநகராட்சி மூலம் விநியோகிக்கப்படும் குடிநீர் 13 நாட்களாக விநியோகிக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் அக்கம் பக்கத்தில் விநியோகிக்கப்படும் குடிநீரை குடங்களில் சென்று சேகரிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சியில் புகார்கள் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால் நேற்று மாலை சுந்தரவேல்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் மற்றும் பெண்கள் சேதுபாதை ரோட்டில், வட்டக்கோவில் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த வடபாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பரபரப்பு ஏற்பட்டது.



Tags :
× RELATED சாலை வளைவில் அபாய பள்ளம் சீரமைப்பு