×

கிணற்றில் விழுந்தவர் படுகாயம்

மேலூர், பிப். 20: மேலூர் அருகே 150 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்தவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். மேலூர் அம்பலகாரன்பட்டி அருகே தேவன்பெருமாள்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் மகன் கருணாநிதி(40). இவரது விவசாய கிணற்றில் இருந்த ஏணியை எடுப்பதற்காக பழைய ஒக்கப்பட்டியை சேர்ந்த பாண்டியன் மகன் மூர்த்தி(35) நேற்று மாலை கிணற்றுக்குள் இறங்கினார். அப்போது நிலை தடுமாறி மூர்த்தி கிணற்றுக்குள் விழுந்து விட்டார். மேலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் அங்குசாமி தலைமையில் சென்ற வீரர்களில் சுப்பிரமணியன் என்ற வீரர் தனி நபராக கிணற்றுக்குள் இறங்கி படுகாயத்துடன் கிடந்த மூர்த்தியை மீட்டு மேலே கொண்டு வந்தார். இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Tags : well ,
× RELATED நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம் மூலம்...