×

சாத்தான்குளம் அருகே வாலத்தூரில் அபாய நிலையில் தொங்கும் மின்விளக்கு சுவிட்ச் போர்டு

சாத்தான்குளம், பிப். 20: வாலத்தூரில் அபாய நிலையில் தொங்கும் மின் விளக்கு சுவிட்ச் போர்டால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். சாத்தான்குளம் ஒன்றியம் சாஸ்தாவிநல்லூர் ஊராட்சிக்குள்பட்ட வாலத்தூரில் அங்குள்ள தெருவிளக்குகளை இயக்கும் வகையில் கிறிஸ்தவ ஆலயம் அருகில் மெயின்ரோட்டில் சுவிட்ச் போர்டு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தினமும் மின் ஊழியர்கள் மூலம் தெருவிளக்கு இயக்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சுவிட்ச் போர்டு பெட்டி பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டதால் பராமரிக்கபடாமல் எந்த நேரமும் அறுந்து  விழும் நிலை காணப்படுகிறது. மேலும் மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ளது. இதன் வழியாக பள்ளி மாணவர்கள் சென்று வருவதுடன் சிறுவர்களும் அதில் விளையாடி வருகின்றனர். இதனால் எந்நேரமும் விபத்து உண்டாகி உயிரிழப்பு ஏற்படும் நிலை தொடர்கிறது என  கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
எனவே மின்வாரிய அதிகாரிகள் பார்வையிட்டு விபத்து  நிகழும் முன் சீரமைக்க வேண்டும் என கிராமமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : board ,Valathur ,Sathankulam ,
× RELATED பெரம்பலூரில் மின்கம்பிகளை உரசிய மரக்கிளைகளை அகற்றும் பணி