×

பாகலூர் பகுதியில் தேங்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு

ஓசூர், பிப்.20: பாகலூர் பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பை கழிவுகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஓசூர் -பாகலூர் சாலையில் பாலாஜி நகர் அமைந்துள்ளது. இப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், சாலையோரத்தில் சிலர் கோழி கழிவுகள் மற்றும் குப்பைகளை மூட்டை, மூட்டையாக கொண்டு வந்து கொட்டி செல்கின்றனர். இதை கால்நடைகள், அப்பகுதியில் சுற்றிதிரியும் நாய்கள் என கிளறிவிட்டும், தின்றும் சாலையில் வீசிச்செல்கிறது. மேலும் பொதுமக்கள் சிலர் கெட்டுப்போன உணவு பொருட்களை கொட்டுகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாலையோரத்தில் கொட்டிய கோழி கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றி, மீண்டும் கொட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சுகாதார துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.




Tags : area ,Bagalur ,
× RELATED வாட்டி வதைக்கும்...