×

மனைவியை ஏமாற்றி 2வது திருமணம் காவலர் பணி இடை நீக்கம்

அண்ணாநகர்: மனைவியை ஏமாற்றி 2வது திருமணம் செய்த காவலர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டார்.  சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் சத்தியவாணி (27). இவர், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜா (27). இவர், தற்போது தமிழ்நாடு சிறப்பு காவல்படை காவலராக பணிபுரிந்து வருகிறார். ராஜபாளையத்தில் காவலராக பணிபுரிந்தபோது நானும், ராஜாவும் காதலித்தோம். இந்நிலையில் ராஜா, 27:10:2017ல் வடபழனி முருகன் கோவியிலில் என்னை திருமணம் செய்து கொண்டார். எங்களுக்கு பெண் குழந்தை பிறந்து உடல் நிலை சரி இல்லாமல் இறந்துவிட்டது. அதன் பின்பு என்னுடன் ராஜா சரிவர பேசவில்லை. இதனால் கணவர் ராஜா மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவரது செல்போனை எடுத்து சோதனை செய்தேன். அப்போது ஒரு பெண்ணிடம் திருமணம் செய்து கொண்ட படம் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

இதுகுறித்து கணவரிடம் கேட்டபோது முன்னுக்கு முரணான பதில் அளித்தார். மேலும் திடீரென எனது கணவர் ராஜபாளையத்தில் 45 நாள் பயிற்சி எடுப்பதாக கூறிச்சென்றவர் இதுவரை என்னிடம் பேசவில்லை.  விசாரித்தபோது அவர் இரண்டாவது மனைவியுடன் வாழ்கிறார். எனவே என்னுடைய கணவரை மீட்டு கொடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறியிருந்தார். இதுகுறித்து காவலர் ராஜா மீது திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்க தாமதம் செய்ததால் சத்தியவாணி நேற்று முன்தினம் காவல் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். இதையடுத்து காவலர் ராஜா பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Tags : marriage guard ,
× RELATED முதல் மனைவியை ஏமாற்றி 2வது திருமணம் காவலர் பணி இடை நீக்கம்