×

விவசாயிகள் முறையீட்டு கூட்டம்

கோவை, பிப் 20,:கோவை மாவட்ட விவசாயிகளுக்கான  முறையீட்டுக் கூட்டம், வரும் 28ம்  தேதி   நடக்கிறது. இது குறித்து கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- பிப்ரவரி மாதத்திற்கான கோவை மாவட்ட  விவசாயிகள் முறையீட்டு கூட்டம், வரும்  28ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10:30 மணிக்கு, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள முதன்மை கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கோவை மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான பிரச்சனைகளுக்கு மனுக்களை அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.



Tags : meeting ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...