×

பண்ணாரி அம்மன் கல்லூரி ஆண்டுவிழா

சத்தியமங்கலம், பிப்.20: சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியின் 24வது ஆண்டுவிழா நடைபெற்றது. பண்ணாரி அம்மன் குழுமங்களின் தலைவர் எஸ்.வி.பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். கல்லூரி அறங்காவலர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். கல்வி, பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு தலைவர் தங்கராஜ் வரவேற்றார். முதல்வர் பழனிச்சாமி ஆண்டறிக்கை வாசித்தார். பொன் ப்யூர் கெமிக்கல்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் பொன்னுசுவாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசுகையில்,`வாகன உற்பத்தி, தொழில்துறை, ஏற்றுமதி, தகவல் தொழில்நுட்பம், ஆயத்த ஆடை உற்பத்தி போன்ற பல துறைகளில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. தமிழகத்தில் உள்ள 63 நிறுவனங்கள் உலகளவில் சிறந்த நிறுவனங்களாக திகழ்கிறது. மாணவர்கள் யோகா, தியானம், உடல் நலனில் கவனம் செலுத்துங்கள். கோபமான நேரத்தில் எந்த முடிவையும் எடுக்காதீர்கள்’ என்றார்.இதைத்தொடர்ந்து, கோவை ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரி இணை நிர்வாக அறங்காவலர் சுதா மோகன்ராம் பேசினார். திட்டம், மேம்பாடு மற்றும் மாணவர் நலன் தலைவர் சிவக்குமார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முடிவில் மாணவி மித்ரா நன்றி கூறினார்.


Tags : Anniversary ,Pannari Amman College ,
× RELATED பந்தலூரில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா