×

பவானி அருகே கிணற்றில் விழுந்த பூனை மீட்பு

பவானி, பிப்.20: பவானி அருகே உள்ள காளிங்கராயன்பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ்பாபு. இவரது மனைவி சுபாஷினி. இவர்கள் கேஎம்எஸ் தோட்டம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களது வீட்டுக்கு அருகில் 6 அடி அகலமும், 50 அடி ஆழமும் கொண்ட கிணறு பயன்படுத்தப்படாமல், பாழடைந்த நிலையில் உள்ளது. கிணற்றில் ஒரு அடி உயரத்துக்கு தண்ணீர் உள்ளது.இந்த கிணற்றில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு ஒரு பூனை எதிர்பாராமல் தவறி விழுந்தது. இதைப்பார்த்த சுரேஷ் பாபுவும், சுபாஷினியும் கயிறு கட்டி மீட்க முயன்றனர். இரு நாட்களாக முயன்றும் முடியவில்லை. இதுகுறித்து பவானி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு நிலைய அலுவலர் காந்தி தலைமையில் விரைந்த வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி மயங்கிய நிலையில் கிடந்த பூனையை உயிருடன் மீட்டனர்.


Tags : Bhavani ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பறக்கும்...