×

பந்துவாக்கோட்டையில் 24ம் தேதி நேரடிநெல் கொள்முதல் நிலையம் திறப்பு

புதுக்கோட்டை, பிப். 20: புதுக்கோட்டை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட உள்ளது. இதுகுறித்து கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்ததாவது, பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், புதுக்கோட்டை மாவட்டத்தில் காரிப் கொள்முதல் பருவம் 2019-20 நெல் அறுவடை துவங்கியிருப்பதால், விவசாயிகள் அதிக அளவில் பயன் பெறும் வகையில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய ஏதுவாக, கறம்பக்குடி வட்டம், பந்துவாக்கோட்டை கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் வரும் 24ம் தேதி முதல் திறக்கப்பட உள்ளது.எனவே, விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் நெல்லினை தங்கள் கிராமங்களுக்கு அருகாமையில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயன் பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags : Opening ,Directorate Procurement Center ,
× RELATED அரியலூரில் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா