×

தூக்கிட்டு பெண் தற்கொலை

கடலூர், பிப். 19: கடலூர் முதுநகர் மம்தா பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி வனஜா( 40). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு வனஜா முயன்றுள்ளார். அப்போது அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உயிருக்கு போராடிய வனஜாவை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இறந்தார். இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஏன் வனஜா தற்கொலை செய்து கொண்டார். குடும்ப பிரச்னை காரணமா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : suicide ,
× RELATED இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை