×

செம்மண் கடத்திய 2 பேர் கைது

பண்ருட்டி, பிப். 19: பண்ருட்டி அருகே வேகாகொல்லை கிராமத்தில் உள்ள வண்ணான்குட்டையில் அரசு அனுமதியின்றி டிப்பர் லாரியில் செம்மண் கடத்துவதாக தாசில்தார் உதயகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் தாசில்தார் மற்றும் வேகாகொல்லை விஏஓ பூவராகவன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது அனுமதியின்றி மணல் எடுத்தது தெரிய வந்தது. இதன் காரணமாக செம்மண் எடுப்பதற்கு காரணமாக இருந்த டிரைவர்கள் அதே பகுதியை சேர்ந்த சிவராமன்(32), பிரகாஷ்(18) ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி விஏஓ பூவராகவன் காடாம்புலியூர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.

Tags : persons ,
× RELATED ஆடு திருடமுயன்ற இரண்டு பேர் கைது