×

மனநலம் பாதித்த முதியவர் மீட்பு

கடலூர், பிப். 19: கடலூர்  மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் (70). மனநலம் பாதித்த இவர்  சென்னை வியாசர்பாடியில் உள்ள அவரது மகள் நிலா வீட்டில் வசித்து வருகிறார்.  கடந்த 16ம் தேதி வீட்டை விட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.  இதற்கிடையே காசிமேடு பகுதியில் ரோந்து பணியில் இருந்த போலீசார் அங்கு  தவித்துக்கொண்டிருந்த ஆறுமுகத்திடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் ஏதும்  பேசாமல் தனது ஊர் பண்ருட்டி, பெயர் ஆறுமுகம் என்று மட்டும் கூறியுள்ளார்.  இதையடுத்து காசிமேடு போலீசார் கடலூர் மாவட்ட எஸ்பிக்கு தகவல் தெரிவித்தனர்.  

எஸ்பி  அபிநவ் உத்தரவின் பேரில் ஆறுமுகத்தின் புகைப்படம்  பண்ருட்டி காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து கடலூர்  மாவட்ட  காவல்துறை சமூக ஊடகப் பிரிவின் மூலம் பண்ருட்டி பகுதி வாட்ஸ்-அப்  குழுக்கள் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. இதைப்பார்த்த  ஆறுமுகத்தின் உறவினர்கள் உடனடியாக காசிமேடு போலீசாரை தொடர்பு கொண்டனர். சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் உடனே முதியோர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆறுமுகத்தை  உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

Tags : Recovery ,
× RELATED உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் புதிய...