×

பெண்ணாடம் அருகே பூட்டை உடைத்து கோயிலில் கொள்ளை

விருத்தாசலம், பிப். 19: பெண்ணாடம் அருகே உள்ள தி.அகரம் கிராமத்தில் வீரனார் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் அதே பகுதியை சேர்ந்த நடேசன்(65) என்பவர் பூசாரியாக இருந்து கோயிலை கவனித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் பூஜையை முடித்துவிட்டு இரவு கோயிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று காலை கோயிலை திறப்பதற்கு வழக்கம் போல் வந்தபோது, கோயில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்களிடம் தெரிவித்துவிட்டு அவர்களோடு கோயிலுக்குள் சென்று பார்த்தபோது,

கோயிலுக்குள் இருந்த 14 கிலோ எடை கொண்ட 2 வெண்கல மணிகளும், 5 வெண்கல குத்து விளக்குகளும், 3 லட்சுமி விளக்குகள், 2 பித்தளை குடம் மற்றும் 2 பித்தளை தாம்பூலம், செம்புகள் உள்ளிட்ட ரூ. 40 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது. மேலும் அங்கிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த சுமார் 2 ஆயிரம் ரூபாய் காணிக்கை பணம் ஆகியவைகள் திருடு போயிருந்தது. இதையடுத்து நடேசன் கொடுத்த புகாரின் பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Pennadam ,
× RELATED கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே லஞ்சம் பெற்ற விஏஓ கைது..!!