×

ஏடிஎம் கார்டு நம்பரை கேட்டு முன்னாள் கவுன்சிலரிடம் நூதன முறையில் திருட்டு

வத்திராயிருப்பு, பிப். 19: வத்திராயிருப்பில் திமுக முன்னாள் கவுன்சிலரிடம் நூதனமான முறையில் வங்கியிலிருந்த பணத்தை திருடிய கும்பலை பிடிக்கக்கோரி புகார் மனு அளித்துள்ளார். வத்திராயிருப்பு வணிகவைசியர் கீழத்தெருவில் வசிப்பவர் திமுக முன்னாள் கவுன்சிலர் மாரிமுத்து. இவரது செல்போனுக்கு நேற்று பேசிய நபர் மாரிமுத்துவிடம் நீங்கள் தனியார் நிறுவனத்தில் கட்டிய பணம் உங்களுக்கு வரப்போகிறது. அதனால் உங்களது வங்கியின் ஏடிஎம் கார்டு நம்பரை கேட்டுள்ளார். ஆவலுடன் உடனடியாக நம்பரை தெரிவித்த மாரிமுத்துவிடம், சிறிது நேரத்தில் ஓடிபி எண் வரும். அதனையும் கேட்ட மர்ம நபர் சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்த 4 ஆயிரம் ரூபாயாயை நூதன முறையில் திருடியுள்ளார். பின்னர் ஏடிஎம் கார்டை வைத்து இருப்பை சரிபார்த்த மாரிமுத்து வங்கியிலிருந்த பணம் திருப்பட்டது அறிந்து அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து வத்திராயிருப்பு காவல்நிலையத்தில் மாாித்து புகார் கொடுத்துள்ளார்.

Tags : Theft ,councilor ,
× RELATED பாஜ கவுன்சிலர் கைது