×

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

விருதுநகர், பிப்.19: சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றக்கோரி விருதுநகரில் சிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் பழைய பஸ்நிலையம் முன்பாக சிபிஐ கட்சியின் மாவட்ட செயலாளர் லிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆப்பாட்டத்தில், தமிழக சட்டமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றக்கோரி கோஷம் எழுப்பினர்.

மதத்தின் பெயரால் நாட்டை துண்டாட வழி செய்யும் சட்டங்களை எதிர்த்து உடனே தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ முன்னாள் எம்எல்ஏ ராமசாமி, முன்னாள் எம்பி அழகிரிசாமி, நகர செயலாளர் காதர் மைதீன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Communists ,
× RELATED இந்தியா கூட்டணி கட்சிகள்...