×

ராஜபாளையத்தில் நாளை மின்தடை

ராஜபாளையம், பிப். 19: ராஜபாளையம் மின் கோட்டத்தில் உள்ள முடங்கியாறு, சேத்தூர் ஆகிய இரண்டு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (20.02.20) மின் வினியோகம் தடை செய்யப்படும். அதனால் முடங்கியாறு எஸ்.எஸ்க்கு உட்பட்ட அய்யனார் கோவில், பி.எஸ்.கே. மாலையாபுரம், தாட்கோ காலனி, திருவள்ளுவர் நகர், தென்றல் நகர், சோமையாபுரம், சம்மந்தபுரம், சின்ன, பெரிய சுரைக்காய்பட்டி, பழைய பாளையம், மாடசாமி கோவில் தெரு, சுப்பராஜா மடம் தெரு, ஆவரம்பட்டி, காமராஜ் நகர், பழைய பஸ்ஸ்டாண்டு, பெரிய கடை பஜார் உள்ளிட்ட பகுதிகளிலும், சேத்தூர் எஸ்.எஸ்.க்கு உட்பட்ட தேவதானம், கோவிலூர், சொக்கநாதன்புத்தூர், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், சுந்தரராஜபுரம், புத்தூர், புனல்வேலி, மீனாட்சிபுரம், ஜமீன்கொல்லங் கொண்டான், தளவாய்புரம், முகவூர், முத்துசாமிபுரம், நல்லமங்கலம், ஆகிய பகுதிகளிலும் காலை 8 மணி முதல் 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின் கோட்ட செயற் பொறியாளர் மாலதி அறிவித்துள்ளார்.

Tags : Rajapalayam ,
× RELATED ராஜபாளையத்தில் மருந்து வாங்க சென்றவர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு..!!