×

சி.இ.ஓ அலுவலக அறை முன்பாக இடைநிலை ஆசிரியர்கள் தரையில் அமர்ந்து தர்ணா

விருதுநகர், பிப்.19: பணி நிரவல் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு வழங்கி இருப்பதால் மீள் பணியேற்பு செய்ய கோரி சிஇஓ அலுவலக அறை முன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தியதால் பரப்பரப்பு ஏற்பட்டது.
சிவகாசி ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றிய இடைநிலை ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக கூறி மற்ற ஒன்றிய பள்ளிகளில் பணி நிரவல் செய்யப்பட்டனர்.

இந்த பணி நிரவல் கடந்த கால நடைமுறைகளுக்கு எதிராக இருப்பதாக கூறி பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணையில் இடைக்கால உத்தரவு 19.9.2019ல் வழங்கப்பட்டது. பின் நடைபெற்ற வழக்கு விசாரணையில் அரசு பணி நிரவல் செய்தது சரி என கூறி அனைத்து வழக்குகளும் தள்ளுபடி

Tags : teachers ,floor ,office room ,CEO ,
× RELATED பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம்