×

கிணற்றில் விழுந்து தொழிலாளி பலி

சின்னமனூர், பிப். 19: கடலூர் மாவட்டம், பண்ருட்டியைச் சேர்ந்தவர் லட்சுமணன் (55). இவர் உட்பட 14 பேர் சின்னமனூர் பகுதியில் தங்கி கடந்த 15 நாட்களாக கரும்பு வெட்டி வந்தனர். நேற்று சின்னமனூர் அருகே எல்லப்பட்டியில் உள்ள தோட்டத்தில் கரும்பு வெட்டியபோது, செல்போனுக்கு சார்ஜ் போடப்போன லட்சுமணன் கிணற்றில் தவறி விழுந்தார். உடன் வந்த பணியாளர்கள் தேடிய நிலையில், கிணற்றில் லட்சுமணன் பிணமாக மிதந்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்த தகவலின்பேரில் வந்த, சின்னமனூர் போலீசார் கிணற்றில் இருந்து லட்சுமணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : well ,
× RELATED புகழூர் நகராட்சி பகுதியில் காவிரி குடிநீர் தட்டுப்பாடு இல்லை