போடி, பிப். 19: போடி முந்தல் சாலையில் மணல் கடத்துவதாக போடி நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் வந்த இரண்டு டூவீலர்களை மடக்கி சோதனை செய்தனர். இதில், அவர்கள் சாக்குப்பையில் மணல் அள்ளி வந்தது தெரிய வந்தது. டூவீலரில் வந்தவர்கள் போடி புதூரை சேர்ந்த கௌதம் (20) மற்றும் ஜெயபாண்டி (24) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இருவர் மீது தனித்தனியே வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இரண்டு டூவீலர்கள், 7 மணல் மூட்டைகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.