×

போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் போராட்டம்

மதுரை, பிப். 19: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கான நிலுவை அகவிலைப்படி வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கும் மருத்துவ காப்பீடு வேண்டும். நீதிமன்ற தீர்ப்புகளை அமல்படுத்த வேண்டும். மேல்முறையீடு செய்யக் கூடாது. ஓய்வு நாளன்றே பணப்பலன்களை வழங்க வேண்டும். பணிக்கொடை, வருங்கால வைப்புநிதி, விடுப்பு சம்பளம் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர் நலச் சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பைபாஸ் ரோட்டிலுள்ள ேபாக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் கிருஷ்ணன், தேவராஜ், தங்கப்பழம், மகாலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : pensioners ,Transport Corporation ,
× RELATED ஓய்வூதியர்கள் சங்க பேரவை கூட்டம்