திண்டுக்கல், பிப். 19: திண்டுக்கல் அருகே குரும்பபட்டி ஊராட்சி பெரியார் நகரில் சீலப்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் இளம்வயது திருமணங்கள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. திண்டுக்கல் சுகாதாரம் மாவட்ட துணை இயக்குனர் நளினி தலைமை வகித்தார். தாடிக்கொம்பு வட்டார மருத்துவர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் போர்சியா ரூபி, மருத்துவர்கள் ஹேமா, சுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டு, இளம் வயது திருமணங்களை தடுப்பதற்குரிய வழிமுறைகளை எடுத்துரைத்தனர். இதில் ஊராட்சி மன்ற தலைவர் முருகன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துலட்சுமி, ஒன்றிய கவுன்சிலர் பார்வதி மற்றும் பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.