×

கொசவபட்டி அக்சயா பள்ளியில் பெற்றோருக்கு பாதபூஜை

ஒட்டன்சத்திரம், பிப். 19: ஒட்டன்சத்திரம் அருகே கொசவபட்டி அக்சயா அகாடமி மெட்ரிக் பள்ளியில் மாணவர்கள் தங்களது பெற்றோர்களுக்கு பாதபூஜை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. தாளாளர் நாச்சிமுத்து தலைமை வகிக்க, முதல்வர் மலர்விழிச்செல்வி முன்னிலை வகித்தார். விழாவில் கல்வி சார்ந்து மட்டுமின்றி வாழ்வில் முன்னேறுவதற்காக மரியாதை செய்யும் வகையில் மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோர்களுக்கு பாதபூஜை செய்தனர். மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் புரிதலை உண்டாக்குவதற்கும், அறிவுசார்ந்த நல்ல மாணவர்களாக உருவாக்குவதற்கும், கூட்டுக்குடும்பத்தின் அவசியம் குறித்தும் மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையிலும் இவ்விழா நடத்தப்பட்டதாக கூறினர். இதில் ஆசிரிய- ஆசிரியைகள், மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : parents ,Kosavapatti Akshaya School ,
× RELATED மின்வாரிய ஓய்வு பெற்றோர் போராட்டம்