×

நத்தத்தில் மின்சாரம் தாக்கி ஊழியர் பலி

நத்தம், பிப். 19: நத்தத்தில் மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர் பலியானார்.நத்தம் அருகே லிங்கவாடியை சேர்ந்தவர் பூசாரி (45). இவர் மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை பூசாரி லிங்கவாடி வலையபட்டி பிரிவு அருகேயுள்ள டிரான்ஸ்பார்மரில் பீஸ் போடுவதற்காக அதன் மீது ஏறியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் பூசாமி சம்பவ இடத்திலேயே பலியாகி டிரான்ஸ்பார்மரில் தொங்கினார். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான பூசாரிக்கு மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.


Tags : electricity attack ,
× RELATED காட்டுயானை மின்சாரம் தாக்கி பலி