×

ஏற்காட்டில் பேரிடர் மீட்பு குறித்து விழிப்புணர்வு

ஏற்காடு, பிப்.19: ஏற்காட்டில், பேரிடர் மீட்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
ஏற்காட்டில் பேரிடர் மீட்பு குறித்து பள்ளி மாணவர்களுக்கு செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. ஏற்காடு வட்டாட்சியர் தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர் ஆனந்தன் முன்னிலையில், ஒண்டிக்கடை அண்ணா பூங்கா பகுதியில் தொடங்கி, சந்தைப்பேட்டை வழியாக படகு இல்லம் வரை மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில், தங்கள் சுற்றுப்புறத்தை குப்பைகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் சேகரமாகாமல் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். தீப்பற்றினால் தீயணைப்பு துறைக்கு தெரிவிப்பது குறித்தும், பேரிடர்களில் சிக்கி கொண்டவர்களை மீட்பது குறித்தும், தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் மாணவர்களுக்கு விளக்கி கூறினார்.

Tags : Yercaud ,
× RELATED ஏற்காட்டில் பரபரப்பு போலி சான்றிதழ்...