×

கொலை முயற்சி, வழிப்பறி வழக்கு ரவுடி மீது பாய்ந்தது குண்டாஸ்

திருவெறும்பூர், பிப்.19: திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு பகுதியில் கொலை முயற்சி மற்றும் வழிப்பறி வழக்குகளில் சம்பந்தமாக கைது செய்யப்பட்டவர் மீது குண்டர் சட்டத்தில் நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.திருச்சி மாத்தூரை சேர்ந்த பாண்டியன் மகன் கார்த்தி(33) என்பவரிடம் கடந்த 4ம் தேதி திருச்சி அருகே உள்ள குழுமணி மெயின் ரோட்டை சேர்ந்த தங்கராஜ் மகன் மணிகண்டன்(22) என்பவர் மாத்தூர் ரவுண்டான பகுதியில் வழிப்பறி செய்துள்ளார். இது சம்மந்தமாக கார்த்தி கொடுத்த புகாரில் மணிகண்டனை நவல்பட்டு போலீசார் கைது செய்தனர். கார்த்தியை கடந்த ஆண்டு தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் தேடப்படும் குற்றவாளி மணிகண்டன் கார்த்தியிடமே வழிப்பறி செய்த வழக்கில் நவல்பட்டு போலீசார் மணிகண்டனை திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் மணிகண்டன் மீது மாத்தூர் ராம்ஜிநகர் சோமரசம்பேட்டை உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளது. சோமரசம்பேட்டையில் ஒரு கொலை வழக்கும் உள்ளது. இதனால் திருச்சி எஸ்.பி., ஜியாவுல்ஹக் உத்தரவின்படி மணிகண்டன் மீது நவல்பட்டு போலீசார் குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



Tags : Rowdy ,
× RELATED குண்டர் சட்டத்தில் ரவுடி கைது