×

கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

இலுப்பூர். பிப்.19: இலுப்பூர் அருகே மனைவி தாய் வீட்டிற்கு சென்றதால் மனமுடைந்த கூலி தொழிலாளி வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.இலுப்பூர் அருகே உள்ள மேலப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிச்சை மகன் ஆரோக்கியசாமி (47) கூலி தொழிலாளி. இவரது மகளை ஆரேக்கியசாமி உறவினர் வகையில் திருமணம் செய்து கொடுப்பதா அல்லது மனைவி ஜெயந்தி உறவினர் வகையில் திருமணம் செய்து கொடுப்பதா என்பது குறித்து ஆரோக்கியசாமிக்கும், ஜெயந்திக்கும் கருத்து வேறுபாடு இருந்துள்ளது. இந்நிலையில் ஆரோக்கியசாமியின் மனைவி ஜெயந்தி 1 மாத காலமாக திண்டுக்கல்லில் உள்ள தனது தாய் வீட்டிற்கு மகளுடன் சென்று விட்டார். இதனால் மனமுடைந்த ஆரோக்கியசாமி மனமுடைந்து நேற்று முன்தினம் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து புகாரின் பேரில் இலுப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags : Suicide worker ,suicide ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை