×

அறந்தாங்கி அருகே பரபரப்பு அறந்தாங்கி அருகே சரக்கு வேன் மரத்தில் மோதி 6 ஆடுகள் பரிதாப பலி

அறந்தாங்கி, பிப்.19:அறந்தாங்கி அருகே சரக்கு வேன் மரத்தில் மோதிய விபத்தில் 6 ஆடுகள் பலியானது.7 பேர் படுகாயமடைந்தனர்.ஆலங்குடி அருகே உள்ள பொன்னன்விடுதியைச் சேர்ந்தவர் சாமிக்கண்ணு. ஆட்டு வியாபாரியான அவர் சரக்கு வாகனத்தில் ஆடுகளை ஏற்றிக் கொண்டு அறந்தாங்கியில் நேற்று நடந்த வாரச்சந்தைக்கு வந்து கொண்டிருந்தார். அவருடன் மருங்காபுரியைச் சேர்ந்த பழனிச்சாமி உள்ளிட்ட 6 பேர் வந்தனர். சரக்கு வாகனத்தை பழனிச்சாமி ஓட்டினார்.அறந்தாங்கியை அடுத்த அழியாநிலை பகுதியில் வந்தபோது, மீமிசலில் இருந்து விராலிமலைக்கு வைக்கோல் கட்டுகளை ஏற்றிச் சென்ற மற்றொரு சரக்கு வாகனம் மோதியது.

இதில் நிலை தடுமாறிய ஆடுகளை ஏற்றிச் சென்ற வாகனம் சாலை ஓரம் இருந்த புளியமரத்தில் மோதியது. இதில் சரக்கு வாகனத்தில் இருந்த 6 ஆடுகள் சம்பவ இடத்திலேயே இறந்தது. மேலும் சாமிக்கண்ணு உள்ளிட்ட 7 பேரும் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.இச்சம்பவம் குறித்து அறந்தாங்கி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Aranthangi ,
× RELATED அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 68.80 சதவீதம் வாக்கு பதிவு