×

மக்கள் கடும் அவதி நடவடிக்ைக எடுக்க கோரிக்கை பொன்னமராவதி அருகே குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

பொன்னமராவதி,பிப்.19: பொன்னமராவதி அருகே ஆலவயல்-கருமங்காடு குண்டும் குழியுமான ஜல்லிகள் பெயர்ந்த சாலையால் வாகனஓட்டிகள் கடும் அவதியுற்று வருகின்றனர்.இதனை சீர்செய்யவேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொப்பனாபட்டி-திருச்சி மெயின்ரோட்டில் ஆலவயல் கருமங்காடு வழியாக குரும்பலூர்செல்லும் சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்துச்சென்று வரமுடியாத அளவிற்கு மோசமாக உள்ளது. தார்மற்றும் ஜல்லிகள் பெயர்ந்து மோசமாக உள்ளது. இதனால் இந்த சாலை வழியாகச்செல்லும் கருமங்காடு துலுக்கஊரணி, கண்டியாநத்தம், குரும்பலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துடன் சென்று வருகின்றனர்.இந்த சாலை குண்டும் குழியுமாக, ஜல்லிகள் பெயர்ந்து கிடப்பதால் இந்த சாலையில் வாகனங்கள் பழுது ஏற்பட்டுச்செல்கின்றது. எனவே குண்டும், குழியுமாக ஜல்லிகள் பெயர்ந்துள்ள ஆலவயல் கருமங்காடு சாலையினை சீர்செய்து தரமாக தார் போட்டு சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Motorists ,
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...