×

கங்கைகொண்ட சோழபுரத்தில் மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும்

ஜெயங்கொண்டம், பிப்.19: உடையார்பாளையம் வட்ட அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர் சங்க கூட்டம் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்றது.கூட்டத்திற்கு சங்கத்தலைவர் சிவசிதம்பரம் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். செயலாளர் ராமமூர்த்தி அறிக்கை வாசித்தார். கூட்டத்தில் அரியலூர் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது உலக வரலாற்றில் இடம்பெற்றுள்ள மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள கங்கைகொண்டசோழபுரம் பகுதியில் மருத்துவக்கல்லூரி அமைய அனுமதி வழங்குமாறு தமிழக முதல்வருக்கும், சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கும் கோரிக்கை வைக்குமாறு எம்எல்ஏ ராமஜெயலிங்கம் மற்றும் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் மூலமாக கேட்டுக்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பொருளாளர் சுந்தரேசன், ராமசாமி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம், கோவிந்தராசன் கலியபெருமாள், லூர்து ஆகியோர் பேசினர். முன்னதாக துணைத் தலைவர் ராமசாமி வரவேற்றார். முடிவில் தலைமை நிலைய செயலாளர் கலியமூர்த்தி நன்றி கூறினார்.

Tags : Medical College ,Gangaikonda Cholapuram ,
× RELATED செங்கல்பட்டு அரசு மருத்துவமனையின்...