×

மாநில கிரிக்கெட் போட்டியில் விளையாடும் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்

அரியலூர், பிப். 19: அரியலூரில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கீழமைக்கேல்பட்டி கிராமத்தை சேர்ந்த சன்மேக்கன் மற்றும் உதயநத்தம் கிராமத்தை சேர்ந்த கார்த்திக் ஆகியோர் மாநில அளவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க உள்ளதால் கிரிக்கெட் உபகரணங்கள் வழங்குமாறு கோரிக்கை மனு அளித்தனர். இதன் அடிப்படையில் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு மாற்றுத்திறனாளியாகிய அவர்களுக்கு நேற்று கிரிக்கெட் உபகரணங்களை கலெக்டர் ரத்னா வழங்கினார். மேலும் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்தார். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ஜெயக்குமார், ராஜா மற்றும் அலுவலர்கள்உடனிருந்தனர்.


Tags :
× RELATED வாக்களிப்பதன் அவசியம் குறித்து...