×

உணவுத்துறை அலுவலர் இட மாற்றத்தை கண்டித்து அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாகை,பிப்.19: உணவு பாதுகாப்பு அலுவலர் பணியிட மாற்றத்தை கண்டித்து நாகையில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்படாட்டம் நடத்தினர்.நாகை கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் இளவசரன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் அந்துவன்சேரல் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் சவுந்தரராஜன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தேன்மொழி, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட துணை தலைவர் ஜோதிமணி ஆகியோர் பேசினர். நாகை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலரும், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளருமான அன்பழகனை பொது சுகாதாரத்துறைக்கு பணியிட மாற்றம் செய்ததை கண்டித்தும், இதற்கு காரணமாக இருந்த உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் உள்ளிட்டவர்களை கண்டித்தும், மீண்டும் அவரை அதே பணியிடத்துக்கு கொண்டு வரவேண்டும் என்பதை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். சிஐடியூ மாவட்ட தலைவர் சீனிமணி உட்பட அனைத்துறை அலுவலர்கள் சங்கங்களை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.



Tags : Government Employees Union ,Food Officer ,
× RELATED ஓய்வு அரசு ஊழியர் சங்க கூட்டம்