×

முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் வென்றவர்களுக்கு சான்று

தூத்துக்குடி, பிப். 19: தூத்துக்குடியில் முதல்வர்  கோப்பைக்காக நடந்த விளையாட்டுப் போட்டிகளில்  வென்றவர்களுக்கு எஸ்பி  அருண் பாலகோபாலன் சான்று வழங்கிப் பாராட்டினார் 2020ம் ஆண்டு முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது.  இதில் தடகளம், நீச்சல், கபாடி, குத்துச்சண்டை, ஹாக்கி, வாலிபால், கூடைப்பந்து, இறகுபந்து , டென்னிஸ் மற்றும் ஜூடோ ஆகிய 10 விளையாட்டுப் போட்டிகள் 25 வயதிற் உட்பட்டவர்களுக்கு நடத்தப்பட்டது.  நிறைவு விழாவுக்குத் தலைமை வகித்த எஸ்.பி. அருண் பாலகோபாலன், போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார். இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் பேட்ரிக், உடற்கல்வி ஆய்வாளர் பால்சாமி, உள்ளிட்ட பலர்  பங்கேற்றனர்.  இவ்விழாவில் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags : winners ,CM Cup ,
× RELATED தேசிய, சர்வதேச போட்டிகளில் பதக்கம்...