×

சாத்தான்குளம் அருகே 4 ஆண்டுகளாக பராமரிப்பின்றி உருக்குலைந்த சாலை

சாத்தான்குளம், பிப். 19: சாத்தான்குளம் அருகே டெண்டர்  விட்டு 4ஆண்டுகளாகியும் கிடப்பில் போடப்பட்ட சாலைப்பணியால் கிராம மக்கள் அவதிப்படுகின்றனர்.  சாத்தான்குளம்  தாலுகா, ஆழ்வார்திருநகரி ஒன்றியத்துக்கு உட்பட்ட இளமால்குளத்தில் இருந்து  மேல் புளியங்குளம் செல்லும் சாலை, பிரண்டார்குளத்தில் இருந்து சந்தோசபுரம்  வழியாக சவேரியார்புரம்  செல்லும் சாலை மற்றும் சின்னமாடன்குடியிருப்பில்  இருந்து உதயனேரி செல்லும் சாலை உள்ளிட்ட சாலைகள் பல்லாண்டுகளாக சீரமைக்கப்படாமல் சேதமடைந்தன. இதனால் அவதிக்கு உள்ளான கிராம மக்கள், தொடர்ந்து புகார் அளித்தனர். இதையடுத்து ஆழ்வார்திருநநகி ஒன்றியம் சார்பில் கடந்த 2016ம் ஆண்டு  புதிய சாலை அமைப்பதற்காக நிதி ஒதுக்கி டெண்டரும் விடப்பட்டது. ஆனால், அதன்பிறகும் கிடப்பில் போடப்பட்ட இச்சாலை, மருந்துக்குக்கூட பராமரிக்கப்படாததால் தற்போது முற்றிலும் உருக்குலைந்துள்ளது. இதை காரணம் காட்டி அரசு பஸ்களும் ஒருசில பஸ்கள் ஊருக்குள் வராமல் புறக்கணித்து  செல்வதாக  மக்கள் புகார் தெரிவித்தனர்.  எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு கிடப்பில் போடப்பட்ட சாலைப்பணி விரைந்து துவங்கி பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

Tags : road ,sathankulam ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி