×

புல்வாமா தாக்குதலில் பலியான சிஆர்பிஎப் வீரர்களுக்கு மரியாதை

ஸ்பிக்நகர், பிப்.19:தூத்துக்குடி மாநகர் மாவட்டம் தெற்கு மண்டலம் இந்து முன்னணி சார்பாக கடந்தாண்டு காஷ்மீர் புல்வாமாவில் தீவிரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதலில் வீரமரணம் அடைந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி முத்தையாபுரம் பஜாரில் நடந்தது.இதில் சிஆர்பிஎப்  வீரர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு இந்திய எல்லை பாதுகாப்பு வீரர்களின் தியாகத்தை போற்றி ராணுவத்திற்கு ஆதரவாக வாழ்த்து முழக்கம் எழுப்பப்பட்டது.நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் மாதவன், மாவட்ட பேச்சாளர் ஆறுமுகம், பாஜ மாநகர தெற்கு மண்டல தலைவர் சின்னதங்கம், பொதுச் செயலாளர் கணேசபெருமாள், மகளிரணி தலைவிதங்கம், தெற்கு மண்டல தலைவர் சுரேஷ், மண்டல பொதுச்செயலாளர் நம்பிராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : soldiers ,CRPF ,attack ,Pulwama ,
× RELATED மண்டபம் அருகே பறக்கும் படையினர் தீவிர சோதனை