×

குளத்தூர் கல்லூரியில் பேரிடர் மீட்பு பயிற்சி

குளத்தூர், பிப். 19: குளத்தூர் கல்லூரியில் பேரிடர் மீட்பு குறித்து விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது. குளத்தூர் மாரியப்பன் நாடார் முத்துக்கனியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளாத்திகுளம் தீயணைப்பு நிலையம் சார்பில் தீ விபத்து கால பேரிடர் மீட்பு நடவடிக்கைகள் குறித்த பயிற்சி முகாம் நடந்தது. கல்லூரி தலைவர் தாமஸ் தலைமை வகித்தார். கல்லூரி இயக்குநர்  கோபால் முன்னிலை வகித்தார். கணினிப் பேராசிரியர் அரவிந்த் வரவேற்றார். கல்லூரி முதல்வர் அன்பழகன் சிறப்பு விருந்தினர்களை கவுரவித்தார். இதையடுத்து விளாத்திகுளம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் தீயணைப்பு வீரர்கள் கருப்பசாமி, ராஜசேகர், வெங்கடசாமி, முருகன், சிலம்பரசன் உள்ளிட்டோர் தீயை தடுக்கும் முறை, நம்மிடம் இருக்கும் பொருட்களை கொண்டு தீயை கட்டுப்படுத்தும் விதம், தீயணைப்பு கருவிகளை முறையாக பயன்படுத்தும் விதம், விபத்தில் காயமுற்றவர்களை எளிதில் தூக்கி சென்று காப்பாற்றும் முறைகளையும் செயல் முறை விளக்கம் அளித்தனர். கல்லூரி அலுவலகப் பணியாளர் மாரியப்பன் நன்றி கூறினார்.

Tags : Klathoor College ,
× RELATED குளத்தூர் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம்