×

திடீர் தீ விபத்தில் குடிசைகள் எரிந்து சாம்பல்

காஞ்சிபுரம், பிப்.19: காஞ்சிபுரம் தாயார் அம்மன் குளம் அருகே வேகவதி கரையில் இருந்த 3 குடிசைகள், மாட்டு கொட்கை முற்றிலுமாக திடீரென தீப்பற்றி எரிந்து சாம்பலாயின. காஞ்சிபுரம் தாயார் அம்மன்குளம் அருகே வேகவதி கரையில் குடிசை வீடுகள் கட்டி வசிப்பவர்கள் பாலாஜி ,  இஸ்ரவேல், ராணி. இவர்களின் குடிசை வீடுகளுக்கு அருகே மாட்டு கொட்டகையும் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் மேற்கண்ட குடிசைகளில் திடீரென தீப்பற்றி எரிந்தது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், அருகில் இருந்த மாட்டு கொட்டகையிலும் தீ வேகமாக பரவியது. இதை பார்த்ததும், அப்பகுதி மக்கள், தீயை அணைக்க முயன்றனர். ஆனால், தீ கொளுந்துவிட்டு எரிந்ததால், அணைக்க முடியவில்லை.

தகவலறிந்து காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்தனர். அதற்குள் குடிசை வீடுகள், மாட்டு கொட்டகை முற்றிலுமாக எரிந்து சாம்பலாயின. புகாரின்படி காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீ விபத்துக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரிக்கின்றனர். இந்தவேளையில், தீ விபத்து பற்றி அறிந்ததும், திமுக எம்எல்ஏ க.சுந்தர், எம்பி செல்வம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று தீ விபத்தில் குடிசைகளை இழந்தவர்களுக்கு ஆறுதல் கூறினர். அவர்களுடன் நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், சாலவாக்கம் குமார், நகர நிர்வாகிகள் சந்துரு, ஜெகநாதன், மலர்மன்னன், கமலக்கண்ணன் உள்பட பலர் இருந்தனர்.

Tags : fire ,
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா