×

பூதப்பாண்டி அருகே கோயிலில் சாமி சிலை சேதம், உண்டியல் உடைப்பு

பூதப்பாண்டி, பிப்.19: பூதப்பாண்டி அருகே கோயிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மர்மநபர்கள் சாமி  சிலையை சேதப்படுத்தியுள்ளனர். பூதப்பாண்டி  அருகே உள்ள அருமநல்லூர் அனந்தனார் கால்வாய் கரையில் இசக்கியம்மன் கோயில்  உள்ளது. இந்த  கோயிலில் அப்பகுதி மக்கள் தினமும் பூஜை செய்து வருகின்றனர். நேற்று காலை  மக்கள் சாமி கும்பிட சென்றபோது, கோயில் நடை திறந்து கிடந்தது.  அங்கிருந்த உண்டியல் உடைத்து வீசப்பட்டு கிடந்தது.நேற்றுமுன்தினம் நள்ளிரவு  அங்கு வந்த மர்ம நபர்கள் இசக்கியம்மன்கோயில் கேட்டை உடைத்து உள்ளே புகுந்து  உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்துவிட்டு உண்டியலை அங்கேயே வீசியுள்ளனர். மேலும் அங்குள்ள துவாரபாலகர் சாமி சிலை  சேதப்படுத்தப்பட்டிருந்தது. இது குறித்து கோயில் நிர்வாகி கேசரி  பூதப்பாண்டி போலீசில் புகார் அளித்தார்.

Tags : Sami ,temple ,Poothapandi ,
× RELATED தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை...