×

போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆரல்வாய்மொழியில் பரிதாபம் கணவனால் தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் சாவு

ஆரல்வாய்ெமாழி, பிப்.19:ஆரல்வாய்மொழி  அருகே கணவனால் மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கப்பட்ட பெண்  மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை இறந்தார்.ஆரல்வாய்மொழி அருகே தோவாளை புதூர் பகுதியை சேர்ந்தவர் புஷ்பதாஸ்  (56). கூலி தொழிலாளி. இவரது மனைவி இரக்கம் (52). இந்த தம்பதிக்கு 2 மகள்கள்  உள்ளனர். ஒரு மகள் திருமணம் முடிந்து தஞ்சாவூரில் குடும்பத்துடன் வசித்து  வருகிறார். 2வது மகள் மதுரையில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் நர்சாக  பணியாற்றி வருகிறார். இதனால் கணவன்- மனைவி மட்டும் வீட்டில் வசித்தனர்.புஷ்பதாசுக்கு  மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் தினமும் போதையில் வந்து  மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு அதிக  போதையில் வந்த அவர் மனைவியுடன் தகராறு செய்து அவரை சரமாரியாக  தாக்கியுள்ளார். அடி தாங்க முடியாமல் கீழே விழுந்த அவர் மீது மண்ணெண்ணெய்  ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

உடல்  கருகியதால் இரக்கம் வலியால் அலறி துடித்தார். சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடி வந்து அவரை  மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக  சேர்த்தனர். இதற்கிடையே இரக்கத்தின் செல்போனை பயன்படுத்தி தலைமறைவாக இருந்த  புஷ்பதாசை போலீசார் குறிப்பிட்ட ஒரு இடத்துக்கு அழைத்து மடக்கிபிடித்தனர்.  தொடர்ந்து நீண்ட விசாரணைக்கு பிறகு அவர் கைது செய்யப்பட்டார்.  இந்த நிலையில் 85 சதவீதம் தீக்காயத்துடன் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்  கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்ட இரக்கத்துக்கு  டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில்  சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை சுமார் 5 மணிக்கு இரக்கம் பரிதாபமாக  இறந்தார். இந்த தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் மருத்துவமனையில்  திரண்டனர்.இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக போலீசார் மாற்றி  உள்ளனர்.  நடத்தையில்  சந்தேகத்தால் மண்ணெண்ணெய் ஊற்றி பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம்  ஆரல்வாய்மொழி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : death ,
× RELATED மதுரை விபத்து: பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு