×

வெளிமாநில மதுபானம் கடத்திய 3 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

திருவண்ணாமலை, பிப்.19: தண்ராம்பட்டு தாலுகா, பெருங்குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அர்ச்சுனன்(30). அதேபோல், கீழ்பென்னாத்தூர் தாலுகா, அண்டம்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் ராமு என்கிற ராமசாமி(32). இவர்கள் இருவரும் வெளி மாநிலங்களில் இருந்து மதுபானங்களை கடத்தி விற்பனை செய்து வந்தனர். இதுதொடர்பாக, பலமுறை போலீசார் வழக்குப்பதிந்தும், மதுபான விற்பனையை இவர்கள் கைவிடவில்லை. எனவே, 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி சிபிசக்கரவர்த்தி கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்படி இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டார்.அதேபோல், தண்டராம்பட்டு தாலுகா, கீழ்ராவந்தவாடி கிராத்தை சேர்ந்த கண்ணன் மகன் விஜி(22) என்பவர், பல்வேறு வழிப்பறி மற்றும் செயின் பறிப்பில் தொடர்பு உடையவர். இது தொடர்பாக, தண்டராம்பட்டு போலீசில் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.எனவே, விஜியை, குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க எஸ்பி சிபிசக்கரவர்த்தி அளித்த பரிந்துரையை ஏற்று, கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டார். அதன்படி, சம்பந்தப்பட்ட 3 பேரும் கைது செய்யப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags : youths ,
× RELATED டாஸ்மாக் கடையை உடைக்க முயன்ற கைதான நான்கு வாலிபர்களுக்கு சிறை