×

ஜவ்வாது மலையை சேர்ந்தவர்கள் ஆந்திராவுக்கு செம்மரம் வெட்ட சென்ற 6 பேர் கைது

போளூர், பிப்.19: ஆந்திராவில் செம்மரம் வெட்டி கடத்த சென்ற ஜவ்வாதுமலையை சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை, பட்டறைக்காடு பகுதியில் இருந்து 6 பேர் கொண்ட கும்பல், ஆந்திராவில் செம்மரம் வெட்ட செல்வதற்காக, ஜமுனாமரத்தூர்- கூர்பட்டு ரோடு அருகே நின்று கொண்டிருப்பதாக ஜமுனாமரத்தூர் போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர்கள் ச.சரவணன், ம.முருகன், அ.லட்சுமண நாராயணன், சிஐடி வ.விஜயன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, அந்த கும்பலை மடக்கி பிடித்தனர். விசாரணையில், அவர்கள் எலவந்த புதூர் கிராமத்தை சேர்ந்த கணேசன், பெரியமச்சூர் பிரபு, மேல்விளாமுச்சி பொன்னுசாமி, கல்யாணமந்தை குப்புசாமி, சத்யராஜ், ஏழுமலை என்பதும், ஆந்திராவில் செம்மரம் வெட்டி கடத்த செல்ல இருந்தது தெரிந்தது.இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து 6 பேரையும் கைது செய்து, வாணியம்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Andhra Pradesh ,
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி