×

டூவீலரில் சென்றவர் லாரி மோதி பலி

சாத்தூர், பிப்.18: தூத்துக்குடி மாவட்டம் கீழமங்களத்தை சேர்ந்த சுப்பையா மகன் குருசாமி (60). இருசக்கர வாகனத்தில் நேற்று சின்னஒடைப்பட்டி விலக்கு அருகே செல்லும் போது எதிரே வந்த டிப்பர் லாரி மோதி சம்பவ இடத்திலே பலியானர்.
அங்கு சென்ற சாத்தூர் தாலுகா காவல்நிலைய போலீசார் பிரேதத்தை பிரேத பரிச்சோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சாத்தூர் அருகே கரிசல்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் புஷ்பராஜ்(40) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Larry ,
× RELATED லாரி மோதி மாணவர் பலி