×

போக்சோவில் கைதான சிபிஎம் உறுப்பினர் கட்சியில் இருந்து நீக்கம் மாவட்ட செயலாளர் அறிவிப்பு

விருதுநகர், பிப்.18: வத்திராயிருப்பில் சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்து போக்சோவில் கைதான சிபிஎம் உறுப்பினரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி இருப்பதாக மாவட்ட செயலாளர் அர்ஜூனன் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்ட சிபிஎம் மாவட்ட செயலாளர் அர்ஜூனன் செய்தியாளர்களிடம் கூறுகையில், வத்திராயிருப்பு ஒன்றியம் ரெங்காபாளையத்தில் ஒரு சிறுவன், இரு சிறுமிகளை தொடர்ந்து பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக அதே ஊரைச் சேர்ந்த வெள்ளைச்சாமி, கணேசன், ரணவீரன், ராதாகிருஷ்ணன், திருவன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். போக்சோ சட்டத்துடன் மேலும் ஜாமினில் வெளிவரமுடியாத அளவில் கடுமையான சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெற்றோருக்கு பாதுகாப்பு, உடல் மற்றும் உளவியல் ரீதியான சிகிச்சைகள் அளிக்க வேண்டும். மாவட்டத்தில் கொங்கலாபுரம் சிறுமியை வன்முறை செய்து கொலை செய்தனர்.
தமிழகத்திலும், விருதுநகர் மாவட்டத்திலும் குழந்தைகள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகிறது.

பாலியல் குற்றங்களுக்கு டாஸ்மாக் மற்றும் போதை பொருள்களின் தாராள விற்பனையே காரணம். போலீசார் உறுதியான நடவடிக்கை எடுத்து போதை பொருள் விற்பனையை தடுக்க வேண்டும். குழந்தைகள் மீதான வன்முறை வழக்குகளை விரைவாக நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே வத்திராயிருப்பு பாலியல் வழக்கில் கைதான, சிபிஎம் ரெங்கபாளையம் கிளை உறுப்பினர் மற்றும் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளராக இருந்த வெள்ளைச்சாமி சமூக விரோத செயலில் ஈடுபட்டதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Tags : removal ,District Secretary ,CPM ,
× RELATED விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும்...