×

முன்னாள் மாணவர் சந்திப்பு

கம்பம். பிப். 18: கம்பத்தில் உள்ள முத்தையா பிள்ளை நினைவு உயர்நிலைப்பள்ளியில் கடந்த 1982-83ல் 10ம் வகுப்பு படித்த 30 மாணவ, மாணவியர் உள்ளூரிலும், வெளியூரிலும் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் 37 ஆண்டுகளுக்கு பின் சந்தித்து தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். முன்னதாக மறைந்த தங்களது ஆசிரியர்களுக்கும், சக மாணவர்களுக்கும் மவுன அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் இங்கு படித்து தஞ்சாவூரில் படிக்கும் மதுக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரியும் குமரவடிவேல், கே.கே,.பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர் கணேசன், பொறியாளர் திருநாவுக்கரசு, திண்டுக்கல் அரசு போக்குவரத்துக் கழக கண்காணிப்பாளர் கண்ணன், திருப்பூர் சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டு தங்களது பசுமை நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இது குறித்து அவர் கூறுகையில், ‘37 ஆண்டுகளுக்குப் பிறகு அனைவரும் சந்தித்தது, எங்கள் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டோம்.

Tags : Alumni Meeting ,
× RELATED அரசு மேல் நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி