×

நண்பரை கொலை செய்த இருவருக்கு 7ஆண்டு சிறை

சிவகங்கை, பிப். 18:  நண்பரை கொலை செய்த வழக்கில் இருவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சிவகங்கை அருகே பெரியகோட்டை வைரம்பட்டியை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் ஆண்டியப்பன்(35). இவர் கடந்த 2013ல் தனது நண்பர்கள் சிவகங்கை மஜீத்ரோட்டை சேர்ந்த வீரமணி(எ)மணிகண்டன்(30), சிவகங்கை டி.புதூரை சேர்ந்த விஜி(எ)விஜயபாண்டின்(29) ஆகியோருடன் சிவகங்கை ரயில்வே ஸ்டேசன் அருகே மது அருந்தினார். அப்போது ஆண்டியப்பன் கொடுக்க வேண்டிய பணத்தை மற்ற இருவரும் கேட்டுள்ளனர். இதில் வாய்த்தகராறு ஏற்பட்டு டூவீலர் சாவியை வைத்து ஆண்டியப்பன் கழுத்தில் குத்தினர். பலத்த காயமடைந்த அவர் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த சிவகங்கை டவுன் போலீசார் வீரமணி(எ)மணிகண்டன்(30), விஜி(எ)விஜயபாண்டின்(29) ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிந்து கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி ரபி, குற்றம் சட்டப்பட்ட  இருவருக்கும் தலா 7 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Tags :
× RELATED நாய் குட்டிகளுக்கு 3 மாதத்தில் தடுப்பூசி போட அறிவுறுத்தல்