×

மாற்றுத்திறனாளிகள் முகாம் ஒத்திவைப்பு

மதுரை, பிப். 18: மதுரை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்வாதார முகாம் நடத்தி அதன் மூலம் அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த முகாம் இன்று (பிப்.18) முதல் 25ம் தேதி வரை ஒன்றிய பகுதிகள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது நிர்வாக காரணங்களுக்காக இந்த முகாம் ஒத்தி வைக்கப்படுகிறது. இந்த முகாம் மற்றொரு தேதி நடைபெறும். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என மதுரை மாவட்ட கலெக்டர் வினய் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED அழகர்கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்