கோவில்பட்டி, பிப். 18: கோவில்பட்டி வட்டார நூலகத்திற்கு சென்ட்ரல் அரிமா சங்கத்தினர் குடிநீர் சுத்திகரிப்பு கருவி வழங்கினர். கோவில்பட்டியில் செயல்படும் வட்டார நூலகத்திற்கு சென்ட்ரல் அரிமா சங்கம் சார்பில் குடிநீர் சுத்திகரிப்பு கருவி வழங்கப்பட்டது. இதையொட்டி நடந்த நிகழ்ச்சிக்கு சென்ட்ரல் அரிமா சங்கத் தலைவர் ராமர் தலைமை வகித்தார். சங்கச் செயலாளர் முத்துராமன், பொருளாளர் செல்வின்சுந்தர், முன்னாள் மாவட்ட ஆளுநர் கந்தசாமி முன்னிலை வகித்தனர். வட்டார நூலகர் அழகர்சாமி வரவேற்றார். இதையடுத்து கோவில்பட்டி சென்ட்ரல் அரிமா சங்கம் சார்பில் குடிநீர் சுத்திகரிப்பு கருவியை நவநீதகிருஷ்ணன் வழங்கினார். அதன் செயல்பாட்டை மாவட்ட ஆளுநர் துவக்கிவைத்தார்.
இதில் மண்டல தலைவர் குருசாமி, வட்டாரத் தலைவர் சங்கரசுப்பிரமணியன் மற்றும் சங்க உறுப்பினர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.