×

அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

நாமகிரிப்பேட்டை, பிப்.18: நாமகிரிப்பேட்டை அருகே ஆயில்பட்டி அரசு உயர் நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. நாமகிரிப்பேட்டையை அடுத்து ஆயில் பட்டியில், அரசு உயர்நிலை பள்ளியில், முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் வேல்முருகன் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில், முன்னாள் மாணவர்களின் சார்பில், பள்ளி கலை அரங்கம் கட்டுவதற்கு நிதி வழங்கப்பட்டது. இதில் பங்கேற்ற முன்னாள் மாணவர்கள் தங்களது பள்ளி அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Government School ,
× RELATED கலைத்திறன் போட்டிகளில் மாவட்ட அளவில்...