×

தடியடி சம்பவத்தை கண்டித்து திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்

பள்ளிபாளையம், பிப்.18: வண்ணாரப்பேட்டை சம்பவத்தை கண்டித்து, பள்ளிபாளையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக -கூட்டணி கட்சியினர் திரளாக பங்கேற்று கோஷங்களை எழுப்பினர்.
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரியும், சென்னை வண்ணாரப்பேட்டையில் அமைதியான முறையில் அறப்போராட்டத்தில் ஈடுபட்ட சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்தும் பள்ளிபாளையம் பேருந்து நிலையத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர திமுக செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி பேசினார். மாவட்ட பொருளாளர் குமார், ஒன்றிய பொறுப்பாளர் யுவராஜ், நகர அவைத்தலைவர் குளோப் ஜான், இளைஞரணி அமைப்பாளர் வினோத் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர திமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.


Tags : DMK ,coalition demonstration ,incident ,Thaddi ,
× RELATED திமுகவின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்