×

பாபநாசம் பகுதியில் நாய்கள் தொல்லை

பாபநாசம், பிப். 18: பாபநாசம் அடுத்த ராஜகிரி, பண்டாரவாடை, வழுத்தூர் உள்ளிட்ட பகுதி தெருக்களில் நாய்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது.மேலும் தெருக்களில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்களை விரட்டி விரட்டி கடிக்க வருகிறது. மேலும் சாலைகளில் திரியும் ஆடு, கோழிகளை நாய்கள் கடித்து வருகின்றன.நாய்கள் கடிக்க வருவதால் சிறுவர், சிறுமிகள் தெருக்களில் செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் திரியும் நாய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : area ,Papanasam ,
× RELATED அதிமுக வேட்பாளரை தடுத்துநிறுத்தி கரும்புவிவசாயிகள் வாக்குவாதம்..!!