×

நாட்டார்மங்கலம் ஜேஜே காலனியில் குடிநீர் கிணற்றை விரைந்து அமைக்க வேண்டும்

பெரம்பலூர், பிப். 18: நாட்டார்மங்கலம் ஜேஜே காலனியில் குடிநீர் கிணற்றை விரைந்து அமைக்க வேண்டுமென பெரம்பலூரில் நடந்த குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் அளித்தனர். பெரம்பலூர் கலெக்டர் அலுவல கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் சாந்தா தலைமை வகித்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தை சேர்ந்த ஜேஜே காலனி பொதுமக்கள் திரண்டு வந்து அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: நாட்டார்மங்கலம் கிராமம் ஜேஜே காலனி பகுதியில் வசித்து வருகிறோம்.

எங்கள் பகுதிக்கு அரசு வழங்கிய குடிநீர் கிணறு வெட்ட உத்தரவு ஏற்கனவே வந்துள்ளது. ஆனால் இன்னும் குடிநீர் கிணறு வழங்கவில்லை. எங்கள் பகுதிக்கு என கடந்த 2 ஆ ண்டுகளாக குடிநீர் வழங்கவில்லை. ஒரே ஒரு குடிநீர் பைப்பு மட்டுமே உள்ளது. எனவே நாட்டார்மங்கலம் ஜேஜே காலனி குடியிருப்பு பகுதி மக்களுக்கு அரசால் வழங்கப்பட்ட குடிநீர் கிணற்றை விரைந்து அமைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Tags :
× RELATED வாக்களிப்பதன் அவசியம் குறித்து...